தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் பள்ளியின் 44 ஆம் ஆண்டு விழா கடந்த கார்த்திகை 7 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி ஆசி வழங்கினார்கள்,
அத்திக்கடவு, கௌசிகாநதி மேம்பாட்டுச் சங்க செயலாளர் திரு. ப.க.செல்வராஜ்,
கணபதி தமிழ்ச் சங்க நிறுவனர் திரு. நித்தியானந்த பாரதி,
சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு திரு.விஜய்பாபு,
கௌமார மடாலயப் பள்ளிகளின் தலைமையாசிரியர், முதல்வர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.
#TKS_Matric_ஆண்டு_விழா

0 Comments